சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4000ஐ கடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆகையால் ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 லிருந்து 2,51,738 அக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஒட்டு மொத்தமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,877 ஆக உள்ளது. 27 பேர் உயிரிழந்ததையடுத்து சென்னையில் பலி எண்ணிக்கை 2,140 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,83,956 லிருந்து 1,90,966 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். இது முன் எப்போதும் இல்லாத பதிவாகும். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது.