சென்னை:

கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை களுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்கலாம் என தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(G) கீழ் 100% வரிவிலக்கு உண்டு என்றும் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(ஜி)-ன் கீழ், 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கும் அயல்நாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

10 லட்ச ரூபாய்க்கு மேல் நிதியுதவி அளிக்கு நபர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிக்கை செய்தியாக வெளியிடப்படும் என்றும்,  நெட் பேங்கிங், டெபிட் (அ) கிரடிட் கார்டு மூலம் அரசின் இணையதளத்தில் நன்கொடை அனுப்பலாம் என்றும், அல்லது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச் செயலக கிளைக்கு நேரடியாக இசிஎஸ் முறையில் நன்கொடையை அனுப்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.