லக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு வன உயிரினங்களையும் விட்டு வைக்கவில்லை…

பல நாடுகளில்உள்ள  சுற்றுலாதலங்களுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்த்துள்ள நிலையில், அவைகள் மக்களின்றி வெறிச்சோடி கிடக்கின்றன… இந்தியாவிலும், குரங்குகள் அதிகம் வசிக்கும் தாஜ்மஹால் உள்பட பல சுற்றுலா தலங்கள், வனவிலங்கு சரணாலயங்கள்  வெறிச்சோடிப்போய் உள்ளது.

இதனால், அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை சார்ந்து வாழ்ந்து வரும் குரங்குகள் போன்ற உயிரினங்கள், உணவுகள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன…

இந்த நிலையில், தாய்லாந்து நாட்டில், புத்தர் கோவில் அமைந்துள்ள லோ பூரி பகுதியில், காரில் செல்லும் சுற்றுலாப்பயணிகளை குரங்கள் கூட்டம் உணவுக்காக  விரட்டிச்செல்லும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது…  அது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது…

இதை பார்ப்போர் நெஞ்சம் பரிதவிக்கிறது….

கொரோனாவின் பாதிப்பு…. மக்களை மட்டுமின்றி இந்த வாயில்லா ஜீவன்களையும் வதைக்கிறதே……