டில்லி

கொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது.

இந்த வருடத்துக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

எனவே கொரோனா அச்சம் காரணமாக நீட் நுழைவுத் தேர்வு மே மாத இறுதி வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.