நெல்லை: நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் 2வது அலை என கூறப்படும்,  இந்த பரவல் தீவிரமாகி வருகிறது.  இதை தடுக்க அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்து உள்ளன.

இந்த நிலையில்,  திருநெல்வேலி மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று  பரிசோதனை செய்து வந்தனர். அப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் உடனே அந்த தெருவை தகரம் வைத்து அடைத்துவிட்டார்கள்.

13 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது, அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.