சென்னை:
னியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து உள்ளது. பல மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.