கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு.
அமிதாப் பச்சனுக்கு நேற்று (ஜூலை 11) தொற்று உறுதி செய்யப்பட்டது. இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே இந்தித் திரையுலகின் மற்றொரு முன்னணி நடிகரான அனுபம் கெர் குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனுபம் கெர் தனது ட்விட்டர் பக்கத்தில்


“என்னுடைய அம்மா துல்ஹரிக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோகிலாபென் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். என் சகோதரர், என்னுடைய அண்ணி, அவர்களது மகன் ஆகியோர் மிகுந்து கவனத்துடன் இருந்தபோதிலும் அறிகுறிகளுடன் அவர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் பரிசோதனை செய்துகொண்டேன், எனக்குக் கொரோனா தொற்று இல்லை’ என மும்பை மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது”.என கூறியுள்ளார் .