கொரோனா : முதல் 14 நாட்களில் வேறுபாடு இல்லாத பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை
டில்லி
உலக அளவில் முதல் 14 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் வேறுபாடு இல்லாமல் இருந்துள்ளன.
உலகைப் பாதித்து வரும் கொரோனா தொற்று கடந்த ஜனவரி மாதம் 22 முதல் அதிகரித்து வந்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 நாட்களில் 14 லட்சத்தைத் தாண்டி உள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜனவரி 22ல் இருந்து 14 ஆம் நாட்கள் வரை கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
அதைப் போல் குணமடைந்தோர் எண்ணிக்கை பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 14 நாட்களுக்குக் கணக்கிடப்பட்டுள்ளது.
அவை இரண்டும் முதல் 14 நாட்களில் ஒரே அளவில் இருந்துள்ளன.
அதன் பிறகு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
நன்றி : தி இண்டியன் எக்ஸ்பிரஸ்