சென்னை:
மிழகத்தில் இன்று 817 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை  18,545 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 817 பேரில் 558 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.  தமிழகத்தில் இன்று மேலும் 6 பேர் பலியானதைத் தொடர்ந்து  மொத்தம் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. இன்று 567 பேர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  9,909 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 817 பேரில்  139 பேர் வெளி மாநிலங்களைச்சேர்ந்தவர்கள், இவர்களில் 138  பேர் மஹாராஷ்டிரா, ஒருவர் கேரளாவில் இருந்தும் தமிழகம் வந்தவர்கள்.
மாவட்டம் வாரியாக விவரம்:
இன்றைய மொத்த பாதிப்பு 817, சென்னை 558, அரியலூர் 4, செங்கல்பட்டு 31, கடலூர் 2, கள்ளக்குறிச்சி 1, காஞ்சிபுரம் 14,  மதுரை 1,  நாகப்பட்டினம் 1,  ராமநாதபுரம் 1, தஞ்சாவூர் 1,  திருப்பத்தூர் 1, திருவள்ளூர் 40,  திருவண்ணாமலை 13, திருவாரூர் 5, தூத்துக்குடி 2, திருச்சி 3.
கோவை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு ஏதும் இல்லை.