சென்னை: தமிழகத்தில் இன்று  477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னையில் இன்று 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.

தமிழகம் முழுவதுரும் இன்று 477 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 8,44,650 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவுக்கு மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 149 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  சென்னையில் 91வது நாளாக இன்றும் 500-க்கும் குறைவாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  சென்னையில் மொத்தம் 2,33,194பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் ஒற்றை இலக்க அளவிலேயே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக விவரம்: