சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. அதிகபட்ச பாதிப்பு சென்னையில் உள்ளது. இதனால், கொரோனா பணிகள் தொடர்பாக லேப் டெக்னிஷியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 3.75 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள லேப் டெக்னிஷியன்கள் , எக்ஸ்ரே டெக்னிஷியன்கள் தேவை எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது . நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலம் பணிபுரிய வேண்டும் .

மாத ஊதியம் லேப் டெக்னிஷியன் – ரூ 15,000,

எக்ஸ்ரே டெக்னிஷியன் – ரூ 20,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியில் சேர விரும்புவோர், மே 7ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.