பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 2 பேர் ஒரு வாரம் முன்பு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். இந்த 4 பேர் மட்டுமல்லாமல், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா மருத்துவமனையில் பணியாற்றும் மேலும் 3 மருத்துவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சாம்ராஜ்நகர் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே, கொரோனாவில் இருந்து காக்க உதவாது. 2வது டோஸ் மருந்தும் செலுத்திக் கொண்டால்தான், நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும் என்று தெரிவித்துள்ளனர்.