கராச்சி: பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179 என்பதாக உயர்ந்துள்ளது.

சமீபத்தில், ஈரானிலிருந்து டஃப்டான் வழியாக பாகிஸ்தான் வந்த யாத்ரிகர்களால் இந்தளவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், சுக்கூர் என்ற இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிக்கூரில் பாதிப்படைந்துள்ள 43 பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ளதன் மூலம், பாகிஸ்தானின் சிந்து பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103 என்பதிலிருந்து 146 என்பதாக அதிகரித்துவிட்டது.

டஃப்டான், கராச்சி மற்றும் ஐதராபாத் பகுதியில் பாதிப்படைந்தவர்களின் முந்தைய எண்ணிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டது. மேலும், கைபர் பக்துன்குவா பகுதியில் பாதிக்கப்பட்ட 15 பேரின் எண்ணிக்கையும் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

மேலும், பலுசிஸ்தான், இஸ்லாமாபாத், கில்ஜித் பல்டிஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.