சென்னை:
மிழகத்தில்  கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது.  இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று தமிழகத்தை சூறையாடி வருகிறது. அதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று முதல் கொரோனா ஊரடங்கில் இருந்து மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டு உளளது.

இன்று மட்டும் புதிதாக  3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று  3,793-பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளதால் இதுவரை 66,571-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் குணமடைந்தோர் வீதம் 57.90 %ஆக உள்ளது.
தற்போதைய நிலையில்,   46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் 33,518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  இதுவரை  13,16,937 பேருக்கு கொரோனா மாதிரி அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1571ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதுவரை 70,017 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 44 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு :

அரியலூர்  – 7

செங்கல்பட்டு 213
சென்னை 1147
கோயம்புத்தூர் 60
கடலூர் 20
தர்மபுரி 8
திண்டுக்கல் 23
ஈரோடு 40
கள்ளக்குறிச்சி 41
காஞ்சிபுரம் 182
கன்னியாகுமரி 77
கரூர் 02
கிருஷ்ணகிரி 14
மதுரை 245
நாகப்பட்டினம் 29
நாமக்கல் 4
நீலகிரி 26
பெரம்பலூர் 2
புதுக்கோட்டை 25
ராமநாதபுரம் 69
ராணிப்பேட்டை 45
சேலம் 39
சிவகங்கை 46
தென்காசி 20
தஞ்சாவூர் 07
தேனி 117
திருப்பத்தூர் 20
திருவள்ளூர் 170
திருவண்ணாமலை 37
திருவாரூர் 12
தூத்துக்குடி 108
திருநெல்வேலி 84
திருப்பூர் 16
திருச்சி 32
வேலூர் 49
விழுப்புரம் 56
விருதுநகர் 86
நேற்று திருப்பத்தூர் மாவட்டம் தவிர்த்து 36 மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 37 மாவட்டத்திலும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.