டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது. கொரோனா தொற்றால்  கடந்த 24 மணி நேரத்தில் 65,002 நபர்கள் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது இன்று 25,26,193 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல 24 மணி நேரத்தில் 996 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 49,036 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக  6,68,220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 18,08,937 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 71.60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த பரிசோதனையில் பாசிடிவ் விகிதம் என்பது 7.48 சதவிகிதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 8,68,679 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 364, தமிழகத்தில் 117, கர்நாடகாவில் 104, ஆந்திர பிரதேசத்தில் 97, மற்றும் மேற்கு வங்கத்தில் 60 என உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.