சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கோவில்கள், வழிப்பாட்டுத்தலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை, அனைத்து கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப்  கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

“கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும்.

கோவில் வளாகத்தில் கைகளை சுத்திகரிக்க கிருமி நாசினி வழங்க வேண்டும்.

10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை கோவிலுக்கு வருவதை பாதுகாப்பு கருதி தவிர்க்க அறிவுறுத்தலாம்.

கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே வரிசையில் பக்தர்கள் அனுமதிக்க வேண்டும்.

பக்தர்கள் கோவிலுக்கு தேங்காய் பழம், பூ போன்றவற்றை கொண்டு வந்து அர்ச்சனை செய்யவதை தவிர்க்கலாம்.

அதேபோல் பிரசாதம் மற்றும் தீர்த்தம் (புனித நீர்) வினியோகத்தையும் தவிர்க்க வேண்டும்.

 பங்குனி திருவிழா நடந்து வரும் கோவில்களில் அப்பகுதிகளில் உள்ள மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள், வருவாய் துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோவில் அதிகாரிகள் எடுக்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.