கரூர்:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த 95 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி பலியானதாக கரூர் ஆட்சியர் அன்பழகன் இன்று (செவ்வாய்கிழமை)  அறிவித்தார்.

அவரது உடல் அரசு விதிமுறைகளின்படியே அடக்கம் செய்யப்படும் என்றும் கூறினார்.

இதன்மூலம் தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 11-இல் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது.