டில்லி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவைக் கூட்டத்துக்கு வரப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் தற்போது நாடாளுமன்ற அவைக்கூட்டங்கள் நடந்து வருகின்றன.

கடந்த 10 நாட்களாகக் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டங்களை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் மத்திய அரசு அதற்கு மறுத்துள்ளது.

அதையொட்டி காங்கிரஸ் கட்சி இரு அவைகளின் கூட்டங்களுக்கும் தங்கள் கட்சி உறுப்பினர்கள் வரப்போவதில்லை என அறிவித்துள்ளது.

நேற்று சமாஜ்வாதி கட்சி இதே அறிவிப்பை வெளியிட்டது.

இன்று மற்றொரு எதிர்க்கட்சியான திருணாமுல் காங்கிரஸ் கட்சியும் நாளை முதல் தங்கள் கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கூட்டங்களில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது.