விழுப்புரம்

கொரோனா பாதிப்பு உறுதியாகித் தப்பி ஓடிய டில்லியைச் சேர்ந்த வாலிபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் டில்லியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி ஆகி உள்ளது.

அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வாலிபர் திடீரென தப்பி ஓடி உள்ளார்.

அவருடைய புகைப்படத்தை அரசு வெளியிட்டுள்ளது.

மேலே கண்டுள்ள புகைப்படத்தில் உள்ளவரை காண்போர் உடனடியாக அரசுக்குத் தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் அளிக்க வேண்டிய எண் 04146 223265 என்னும் எண்ணாகும்.

பத்திரிகை. காம் தங்கள் வாசகர்களிடம் இதே கோரிக்கையை வைக்கிறது.