போர்ட் ஆஃப் ஸ்பெயின்: தனது 34வது பிறந்தநாள் விழாவை முகக்கவசம் அணியாமல் கொண்டாடிய ஓட்டப் பந்தய மன்னன் உசைன் போல்ட் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அதேசமயம், அவருக்கு அறிகுறிகள் எதுவுமில்லை.

இதனையடுத்து, அவர் ஐமைக்காவிலுள்ள தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் 100 மீ & 200 மீட்டர் ஓட்டங்களில் தொடர்ந்து 3 மு‍றை தங்கம் வென்றவர் என்ற சாதனைக்கு உரியவர் போல்ட். மேலும், மொத்தம் 8 ஒலிம்பிக் தங்கங்களையும் பெற்ற பெருமைக்குரியவர். கடந்த 2017ம் ஆண்டு இவர் உலக தடகளத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

இவர் தனது பிறந்தநாள் விழா முடிந்த மறுநாள், இவர் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். அவருக்கு பாசிடிவ் முடிவு வந்ததையடுத்து, “பாதுகாப்பிற்காக, நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் மற்றும் சூழலை எளிதாக எடுத்துக்கொண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார் போல்ட்.

இவர் விரைவில் குணமடைய, இவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் வழங்கி வருகின்றனர்.