சென்னை:

மிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யுடன், பிரதமர் தொலைபேசியில் கேட்டறிந்தார். மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்வும் அறிவுறுத்தினார்.

முன்னதாக நேற்று முதல்வர் பழனிச்சாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல்வேறு ஆய்வு கூட்டங்களை நடத்தினார். மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நிலைமைகளை கேட்டறிந்து  பல்வேறு யோசனைகளை தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புப் பணிகள் குறித்த நடவடிக்கைகள் குறித்து கேட்டார்.

அப்போது,  தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை பாரத பிரதமரிடம் எடப்பாடி எடுத்துரைத்தாக கூறப்படுகிறது.

அப்போது, பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடியிடம், மக்கள் நலன் கருதி, 144 தடையுத்தரவினை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதை உறுதிசெய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.