செங்கல்பட்டு:
மிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இங்கு நாளுக்கு நாள் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜூன் மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. ஒரே நாளில் செங்கல்பட்டு 136 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை  160 ஆக உயர்ந்துள்ளது இதன் காரணமாக  மொத்த பாதிப்பு 2865ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 1,150 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.