டெல்லி:
ந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.72% ஆகவே உள்ளது. அதேவேளையில் கொரோனா வில் குணைமடைவோர் 63% ஆக உயர்ந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று உச்சமடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  26,506 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.93 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில்  475 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21,604 ஆக உயர்வடைந்து உள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன்,  நாடு முழுவதுமுள்ள 1,115 பரிசோதனை மையங்களில் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்ததில், கொரோனா பாதிப்பு பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை கடந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றில் இருந்து குணமடையும் விகிதமான   டெல்லி, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்  சராசரியை விட கூடுதலாக உள்ளது.   இது கடந்த 7ந்தேதி 61.13% ஆக உயர்வடைந்து இருந்தது.  இந்த விகிதம் கடந்த 8ந்தேதி 61.53% ஆகவும், நேற்று 62.09% ஆகவும் உயர்ந்திருந்தது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 1.75 முறை அதிகம் ஆக உள்ளது.  4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 63% ஆக உள்ளது.   இறப்பு விகிதம் 2.72% ஆக உள்ளது. 
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. பரிசோதனை களை நாம் அதிகரித்து வருகிறோம். நாளொன்றுக்கு நாங்கள் 2.7 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்கிறோம்.
இந்தியா பெரிய இருந்தபொழுதும், சமூக பரவல் நிலையை நாம் அடையவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.