அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 275640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 152613 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 10928 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 151820 பேருக்கும், டெல்லியில் 116993 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. ஒரே நாளில் அதாவத கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 32,695 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. அதே வேளையில் 606 பேரின் உயிரையும் பலிவாங்கி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 9,68,876 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் 606 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,915 ஆக உயர்ந்துள்ளது. உயரிழப்பு விகிதம் 2.6 சதவீதமாக உள்ளது.