டெல்லி:

ந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 773 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், மேலும் 10 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும்,  773 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,194 ஆக  உயர்ந்து உள்ளது.

அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதால், பலியானோர் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.  அதையடுத்து, தமிழகமும், டெல்லியும்  கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது,

”மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பு நேர்ந்துள்ளது. அங்கு 64 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள்.

குஜராத், மத்தியப் பிரதேசத்தில் தலா 13 பேரும், டெல்லியில் 9 பேரும், தெலங்கானா, தமிழகம், பஞ்சாபில் தலா 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில 5 பேரும், ஆந்திராவில் 4 பேரும், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணாவில் தலா 3 பேரும், கேரளா, ஜம்மு காஷ்மீரில் தலா 2 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

பிஹார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 1,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 19 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லியில் 576 பேர் பாதிக்கப்படடுள்ளனர். 21 பேர் குணமடைந்துள்ளனர்.

தெலங்கானாவில் 364 பேரும், கேரளவில் 336 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 326 பேரும், ராஜஸ்தானில் 238 பேரும், ஆந்திராவில் 305 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 229 பேரும், கர்நாடகாவில் 175 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 165 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 116, மேற்கு வங்கத்தில் 99, பஞ்சாபில் 91, ஹரியாணாவில் 147, பிஹாரில் 38, அசாமில் 27, உத்தரகாண்ட்டில் 31, ஒடிசாவில் 42, சண்டிகரில் 18, சத்தீஸ்கரில் 10, லடாக்கில் 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 10 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 18 பேர், புதுச்சேரியில் 5 பேர், ஜார்க்கண்ட்டில் 4 பேர், மணிப்பூரில் 2 பேர், மிசோரம், அருணாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.