டெல்லி:

ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்து உள்ளது.

அதுபோல ஆந்திராவிலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு   கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 893 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 141 பேர் குணமடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் மேலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 445-ஆக அதிகரித்துள்ளது.