சென்னை:

மிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக,சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடக்கம் மார்ச் 31ந்தேதி வரை நீடிக்கும் என தெரிகிறது.

இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை  370 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடக்கம்.

இது போல இந்தியாவில் 75 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது.