சென்னை:

லகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் 3491 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2873 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுகான் மாவட்டத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், ஹுபெய் மாகாணம் உள்பட பல இடங்களில் பரவி ஏராளமானவர்களை காவு வாங்கி வருகிறது. சுமார் 90  நாடுகளில் பரவி உள்ளது. உலக அளவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டடோர் (102,186) இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் பலி எண்ணிக்கை 3070 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக 99 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 74 பேர் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 25 பேர் ஆவர். ஹுபெய் மாகாணத்தில் நோய்த்தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்துள்ளது.

உலகம் முழுவதும்ட கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2873 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். உலக அளவில் 102,186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.