சென்னை

ன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை  9227 பேர் பாதிப்பு அடைந்து அதில் 64 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று வரை 2176 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

வரும் 17 ஆம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது.

அது மேலும் நீட்டிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி ஆலோசனை நடத்தினார்.

அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு விதிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.