சென்னை

மிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 24586 பேர் பாதிப்பு அடைந்து அதில் 197 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மொத்தம் 13706 பேர் குணமாகி தற்போது 10680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் சென்னையில் அதிகம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

சென்னையில் 16585 பேர் பாதிக்கப்பட்டு 150 பேர் உயிர் இழந்து 8554 பேர் குணம் அடைந்துள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1308 பேர் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிர் இழந்து 661 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 1025 பேர் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிர் இழந்து 616 பேர் குணம் அடைந்துள்ளனர்.

அடுத்த இரு இடங்களில் கடலூரில் 463 பேருக்கும் திருவண்ணாமலையில் 444 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.