சென்னை:
முதல்வர் பாதுகாப்பு சென்ற காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரது பாதுகாப்பு பணியில் ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் மூன்று பேர் ஈடுபட்டு இருந்தனர்.

இவர்களில் கோவை சென்று வந்த காவலர் ரவிக்குமார் முதலில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கபட்டது. தொடர்ந்து அவருடன் சென்ற இருவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், முதல்வரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற 3 பேருக்கும் கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யபப்ட்டது.

இவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றனர்.