சென்னை:
சென்னையில் ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்த படியாக கடலூர் மாவட்டத்தில் 122 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தற்போது, ஊரடங்கில் இருந்து பல  தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.
மிழகத்தில் இன்று   ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 266 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது  இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1724 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை தமிழகஅரசு  அறிவித்து உள்ளது.
சென்னை, கடலூர்,  அரியலூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், கரூர், மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணா மலை, திருவாரூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று புதிதாக நோய்த் தொற்று பதிவாகியுள்ளது.