டில்லி

ன்று கர்நாடகா மாநிலத்தில் 1280, ஆந்திராவில் 551, கேரளாவில் 5032 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இன்று 1280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 8,95,284 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதுவரை 11,880 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,060 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 8,58,370 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 25,015 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திராவில் இன்று 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 8,72,839 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,042 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 744 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,60,368 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,429 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திரா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 5,032 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 6,44,697 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 31 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 2473 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,217 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,72,911 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 59,748 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.