தொற்றுநோயால் உண்டான வேலையின்மையைக் கையாள்வதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் வெவ்வேறு அணுகுமுறைகளை தேர்ந்தெடுத்துள்ளன. ஆனால் இது நீண்டகாலத் தீர்வாக இருக்குமா?

கடந்த இரண்டு, பயங்கரமான, மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் வேலையின்மையை, 1930 களில் ஏற்பட்ட பெரும் பொருளாதார சரிவிற்குப் பிறகு  பெரும் அளவை எட்டியுள்ளது. இது இப்படி தான் இருக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு பதில் இல்லை. கோவிட் -19 கடந்த ஏழு வாரங்களில் 33 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களின் வேலைகளை பறித்துள்ளது. முழு அமெரிக்க மக்கள்தொகையில் 10% ஆகும். அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள வேலையின்மை விகிதம் 4.4%- இல் இருந்து 14.7% வரை உயர்ந்துள்ளது. உண்மையில் இது குறைத்து மதிப்பிடப்பட்டது ஆகும். ஐரோப்பாவில் அட்லாண்டிக் முழுவதும் வேலையின்மை விகிதங்கள் கடுமையாக உயரும் அதே வேளையில், அமெரிக்காவில் உள்ளவாறு, பேரழிவு நிலையை இன்னும் எட்டவில்லை. இங்கிலாந்து 9% க்கும் அதிக வேலையின்மையை எதிர்கொண்டுள்ளது. ஜெர்மனியில் சர்வதேச நாணய நிதியம் 2020 ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதத்தை வெறும் 3.9% என்று கணித்துள்ளது, இது கடந்த ஆண்டு 3.2% ஆக இருந்தது.

முற்றிலுமான றுபாடுகளை ஒரு ஜெர்மன் வார்த்தையால் விளக்கலாம்: “குர்சர்பீட்.” இந்த முன் அனுபவமில்லாத ஊரடங்கு மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட வேலை இழப்புகளில் இருந்து மீள்வதற்கான ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு சிறந்த வழிகள் உள்ளன.  “குர்சர்பீட்” – அதாவது “குறுகிய வேலை” – இதன்படி, ஒரு தற்காலிக அவசரநிலையை எதிர்கொள்ளும் வணிகங்கள் நெருக்கடி கடந்து செல்லும் வரை தொழிலாளர்களின் சம்பளத்தை செலுத்துவதற்கு அரசாங்க மானியங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் மேனேஜ்மென்ட்டில் தொழில் முனைவோர் பேராசிரியரும், சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் இன்ஸ்டிடியூட்டின் மூத்த சக ஊழியருமான சைமன் ஜான்சன் கூறினார். திறமையான தொழிலாளர்களைத் தக்க வைத்துக் கொள்வது மற்றும் நெருக்கடியில் இருக்கும் வீடுகளை பராமரிப்பது, கொள்கை அடிப்படையில், மக்கள், நிறுவனங்கள் மற்றும் நாடுகள் நெருக்கடி கடந்தவுடன் வேகமாக முன்னேற அனுமதிக்க வேண்டும், என்றார்.

இங்கிலாந்து, இத்தாலி மற்றும் நெதர்லாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகள்,  தற்போதைய வேலையின்மை நெருக்கடியில் இருந்து ஜெர்மனி மீண்டு வருவதைக் கண்ட பிறகு, ஜெர்மனியின் செயல்முறையையே, மாடலாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.  “ஜெர்மனிக்கு மிக நெருக்கமானவர்கள் உண்மையில் இதைப் புரிந்துக் கொண்டதாகத் தெரிகிறது. மற்றவர்கள் இன்னமும் புரிந்துக் கொள்ள போராடி வருகின்றனர்” என்று அவர் கூறினார். அதற்கு பதிலாக, அமெரிக்கா பெரும்பாலும் நெருக்கடியைச் சமாளிக்க அதன் வேலையின்மை காப்பீட்டு திட்டத்தை நம்பியுள்ளது. பல அரசியல் மோதல்களுக்குப் பிறகு, கோடை காலம் வரை வாரத்திற்கு 600 டாலர்கள் வரை வேலையின்மை நிதியளிக்கவும், மாநிலங்களின் நன்மைகளை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி, பெரும்பாலான மாநிலங்களில் வாராந்திர அதிகபட்ச வேலையின்மை நிதி சலுகைகள்  இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

தத்துவரீதியான பிளவு சரியானது. “குர்சர்பீட்” அம்சம் கொண்ட செயல்பாடுகளின் படி, அமெரிக்கா $669 பில்லியன் மதிப்புள்ள சம்பள காசோலை பாதுகாப்பு திட்டத்தை (பிபிபி) தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, சிறு வணிகங்கள் திருப்பி செலுத்தக் கூடய அல்லது திருப்பி செலுத்த தேவையில்லாதா கடன்களை, நிறுவனங்கள் தன்களின் ஊழியர்களுக்கு அவசரகால கடனாக வழங்கலாம். இதன் மூலம் நிறுவனங்கள் தணலது அத்தியாவசிய ஊழியர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆனால், இந்த திட்டத்தில் உள்ள பல குளறுபடிகள் காரணமாக, நிறுவனங்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. இந்த அத்திட்டத்தில் இருந்து பல பெரும் நிறுவனங்களுக்கு பெரிய தொகைகள் முதலில் வழங்கப்பட்டன. இதில், LA லேக்கர்ஸ் கூடைப்பந்து அணி மற்றும் ஷேக் ஷேக் பர்கர் சங்கிலி உணவகங்கள் ஆகியவை அடங்கும். ஆனால் பல சிறு வணிக நிறுவனங்கள், தணலின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளன. மேலும், பணம் திருப்பி செலுத்தல் பற்றய நிச்சயமில்லாத நிலையினால் பயந்து விட்டன. எனவே அமெரிக்காவின், அமெரிக்காவின் வேலையின்மை திட்டம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிறைவேறியது என்று கூற இயலாத நிலை உருவாகியுள்ளது. பல மாநில அரசுகளும், இந்ததிட்டத்தின் கீழ் பயன் பெற குவிந்த விண்ணப்பங்களைக் கண்டு மலைத்து விட்டன. எனவே, மில்லியன் கணக்கான மக்கள், நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா அமெரிக்காவை தாக்கியபோது, ‘முழு விஷயமும் மிகவும் குழப்பமாக இருந்தது’ சைமன் மற்றும் கோடி பேட்ஸ் ஆகியோர் கூறினார். இவர்கள், ஹிப் கல்லூரி நகரமான கன்சாஸில் உள்ள லாரன்ஸ் நகரில் மூன்று உணவகங்களை நடத்தி வந்தனர். அவர்கள் மார்ச் மாதத்தில் எல்லாவற்றையும் மூடிவிட்டு 130 பேரை பணிநீக்கம் செய்ய வேண்டியிருந்தது. நேரம் மோசமாக இருந்தது. திருமண சீசன் ஆரம்பமாகிவிட்டது, இந்த ஜோடியின் சைடர் கேலரி நிகழ்வு நடக்கும் இடமும் மூடப்பட வேண்டியிருந்தது. பேட்ஸ் ஆரம்பத்தில் பிபிபியைப் பார்த்தார். “நாங்கள் இரண்டு வெவ்வேறு வங்கியாளர்களையும் ஒரு முழு கணக்காளர் குழுவையும் கொன்றுக்கிறோம். ஆனால், ஒவ்வொருவரும், வெவ்வேறு விசயங்களை, வேறுவேறான கோணத்தில் சொல்கிறார்கள். இரவில் எட்டு மணிக்கு பிறகும் எங்களுக்கு அழைப்புகள் வருகின்றன, ”என்று சைமன் பேட்ஸ் கூறினார். “முழு விஷயம் மிகவும் குழப்பமாக இருந்தது.” பல அமெரிக்க வணிகங்களைப் போலவே, எதிர்காலம் தெளிவாக இருக்கும் வரை ஊழியர்களை விடுவிப்பதே நல்லது என்று அவர்கள் முடிவு செய்தனர்.

அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர், அவர்கள் பணியில் சேர்ந்தபோது இருந்ததை விட, இப்போது சிறப்பாக செயல்படக் கூடியவர்கள். பேட்ஸ் தனது உணவகங்களை மீண்டும் திறந்து, பார்சல்கள் மட்டும் வழங்கும் வகையில் செயல்பட தொடங்கியுள்ளார். சுமார் ஒரு டஜன் பணியாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தியுள்ளார். தனது பழைய பணியாளர்களை அவர் வேலைக்குத் திரும்பும்படி கேட்டபோது, அவ உயர்த்தப்பட்ட வேலையின்மை பலன்களை பெறுவதாக கூறியதை நினைவு கூர்ந்தார். அனால் அது மோசமான யோசனையும் அல்ல. “எங்கள் வணிகம் ஒரு சமூக வணிகமாகும். ஆனால், தற்போது மக்களின் எதிர்பார்ப்புகள் எவ்வாறு மாறியுள்ளது என்று யாருக்கும் தெரியாது” என்றார் பேட்ஸ். “தற்போது மட்டுமல்ல, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விஷயங்கள் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது,” என்றார்.

சில்லறை விற்பனை, ஹோட்டல் மற்றும் பொழுதுபோக்கு போன்ற பிற தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவைகள் இயல்பானநிலைக்கு திரும்ப, மிகவும் நீண்ட காலம் எடுக்கலாம். ஒருவேளை அந்தத் தொழில்களில் உள்ளவர்கள் வேறொரு இடத்திற்கு மாறுவது நல்லது. ஆனால், இதில் உள்ள ஆபத்து என்னவென்றால், மக்கள் எந்த நேரத்திலும் வேலையில்லாமல் போனால், அவர்கள் தங்கள் திறன்களை இழக்கிறார்கள், மேலும் அவர்கள் மீண்டும் வேலையில்  சேரும் திறனை இழக்கிறார்கள்,” என்று ஜான்சன் கூறினார், இதுபோன்ற ஒரு அனுபவம் கடந்த கால வேலையில்லா திண்டாத்தில் இருந்து மக்களை மெதுவாக மீட்டது. மறுபுறம், ஜெர்மனியின் மாடல், மக்களை ஏதேனும் ஒரு வழக்கமில்லாத வேலையில் இணைய வைக்கிறது.

இது நிச்சயமாக ரியான் பார்ன், கேடோ இன்ஸ்டிடியூட்டில் பொருளாதாரத்தைப் பற்றிய பொது புரிதலுக்கான ஆர் இவான் ஷார்ஃப் தலைவர், ஒரு சுதந்திர சிந்தனையாளர். எந்த அணுகுமுறையை – இன்னும் இருந்தால் – இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்ல இன்னும் போதுமான தரவு எங்களிடம் இருக்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார். “இந்த அமைப்புகளின் வெற்றியை மதிப்பிடுவதற்கு வேலையின்மை கணக்கீடுகள், அதன் கணக்கீட்டு முறைகள் போன்றவை என்று நான் நினைக்கவில்லை,” என்று பார்ன் கூறினார். “நீண்ட காலமாக, முடக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் பொருளாதாரம் எவ்வளவு மாறப்போகிறது என்பது இங்கே முக்கியமானது. மக்களை சம்பளம் பெறுபவர்களின் பட்டியலில் வைத்திருக்க மானியங்கள் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். “மறுபுறம், பொருளாதாரம் நிரந்தரமாக மாற்றப்பட்டால், மக்கள் உணவகங்களுக்குச் செல்ல விரும்பவில்லை, மக்கள் மீண்டும் சினிமாவுக்குச் செல்ல விரும்பவில்லை, மக்கள் வெவ்வேறு தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குகிறார்கள். ஆனால், அது கடுமையானதாகத் தோன்றலாம், எனவே பொருளாதாரம் சரிசெய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், வணிகங்கள் தோல்வியடையும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், ”என்று அவர் கூறினார்.

கடந்த 10 வருடங்களில், மிகப்பெரிய பொருளாதார சவாலை சமாளிக்க எந்த அமைப்பு சிறப்பாக நிரூபிக்கிறது என்பதை காலம் சொல்லும். அமெரிக்க வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வந்தால், டிரம்ப் நிர்வாகத்திற்கு அதன் பொருளாதார அமைப்பில் சில ஜெர்மானியர்களை சேர்க்க அதிக அழுத்தம் கொடுக்கப்படலாம். சில நேரங்களில் டொனால்ட் டிரம்பிற்கு பிடித்த ஃபாக்ஸ் நியூஸ் ஹோஸ்ட் டக்கர் கார்ல்சன் சமீபத்தில் குர்சர்பீட்டைக் குறிப்பிட்டுள்ளார், மேலும் டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே பிணை எடுப்பு குறித்து விவாதித்து வருகிறது.

ஆனால் ஒரு கட்டத்தில், அரசாங்கங்கள் ஒரு பெரிய கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பார்ன் கூறினார். “ஒருபோதும் திரும்பவே திரும்பாத எதிர்காலத்திற்கான அவசரகால நடவடிக்கைகளை காலவரையின்றி வைத்திருப்பது” அர்த்தமா?

தமிழில்: லயா