டெல்லி: நாட்டில் 1.42 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: இன்று காலை 7 மணி வரை, தமிழகத்தில் 4,45,328 பேர், புதுச்சேரியில் 11,144 பேர் உள்பட, நாடு முழுவதும் 1,42,42,547 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

2,92,312 முகாம்களில் 66,68,974 சுகாதார பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 24,53,878 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (2வது டோஸ்), 51,19,695 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசி இயக்கத்தின் 42ம் நாளில் 13,397 முகாம்களில் 7,64,904 பயனாளிகளுக்கு (3,49,020 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 4,20,884 பயனாளிகளுக்கு 2வது டோஸ்) நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.