டெல்லி: இதுவரை 37.44 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட  தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று காலை 8 மணி வரை, தமிழகத்தில் 1,05,821 பேர் உட்பட, நாடு முழுவதும் 37.44 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5,275 முகாம்களில் 2,44,307 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 68,962 முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.

தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களில் 63.34 சதவீதத்தினர் 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 7,032 பேரும், மகாராஷ்டிராவில் 1,535 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர். உலகளவில் தடுப்பூசியை செலுத்தும் நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.