டில்லி

திர்க்கட்சி ஆட்சி செலுத்தும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதை மத்திய பாஜக அரசு கண்டுக் கொள்லவில்லை என புகார் கூறப்படுகிறது.

தற்போது கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது.  குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அதை மத்திய மோடி அரசு கண்டுக் கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இதையொட்டி பிரபல செய்தி ஊடகமான நேஷனல் ஹெரால்ட் ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில் காணப்படுவதாவது :

அரசியல் கட்சிகள் கொரோனாவை வைத்து இந்தியாவில் அரசியல் விளையாட வேண்டுமா? ஆனால் கடந்த சில நாட்களில் ஒரு ஆபத்தான இரண்டாவது அலை நாட்டை தாக்கும்போது தடுப்பூசிகள் வழங்குவதில் அது தான் நடக்கிறது.  இந்த நிகழ்வு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கும் மோடி அரசாங்கத்திற்கும் இடையில் அதிக அளவு தடுப்பூசிகளுக்கான போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 ஜனவரியில் கொரோனா நாட்டைத் தாக்கியபோது,​​பிரதமர் மோடி நிலைமையை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து மாநில முதல்வர்களுடனும் பொதுமக்களுடனும் ஆலோசித்து அவர்களின் வாக்குறுதியுடன் மாநிலங்களை ஆலோசித்து வழிநடத்தினார். அவர்களுடன் இணைந்து மோடி பணியாற்றினர்.

இந்த நோய் தொற்று தேசிய அளவிலான பலவீனங்கள், மோசமான சுகாதார வசதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட  வசதிகள் இல்லாதது, தேவையான சமூகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி தேவை போன்றவைகளாலும் அதிகரித்து வந்தது.   இதையொட்டி பிரதமர் மற்றும் மாநில  முதல்வர்ர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி, மகத்தான மருத்துவ அவசரநிலையைச் சமாளித்து நடவடிக்கைகள் நடத்தினர்.

ஆயினும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கை அரசாங்கம் தவறாக கையாண்டதா என்பது கேள்விக்குறியாக இருந்தது.  மேலும் ஊரடங்கு என்பது ஒரு அரசியல் பிரச்சினையாக மாறவில்லை.  மேலும் மோடி அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளால் கூட ஒரு எல்லைக்கு மேல் விமர்சிக்க முடியவில்லை. 

தற்போது, ​​ஒரு வருடம் கழித்து, கொரோனா அதன் இரண்டாவது அலையை தொடங்கிய போது அரசியல் தலை தூக்கி உள்ளது நன்கு தெரிய வந்துள்ளது. அதாவது, ​​அதிகாரிகளின் தரப்பு செய்திகள் மூலம் தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் தவறான கணக்கீடுகள் வெளி வருகின்றன.  கொரோனா இரண்டாவது அலை ஏழு மாநிலங்களை பாதித்துள்ளது,  இதற்கு மேலும் கூட மாநிலங்கள் பாதிக்கப்படலாம். தற்போதைய நெருக்கடி அதை நோக்கித்தான் நகர்கிறது.

இதில் எதேனும் தவறு நடந்தால், மைய அரசு மாநில அரசுகளை குற்றம் சாட்டுகிறது,   அதே வேளையில் தேவையான அளவு தடுப்பூசிகள் வழங்காததற்கு மாநிலங்கள் மத்திய அரசை குற்றம் சாட்டுகின்றன.    தடுப்பூசிக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.   முதலில் தடுப்பூசி போட தயங்கினர்.  ஆனால் இப்போது தடுப்பூசிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றை கையாள்வதில் மக்களின் மீட்பர் என்று பாஜக மோடியைக் கூறுகின்றன.  ஆனால் எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் தாங்கள் தான் சிகிச்சை அளிக்கிறோம் என கூறியுள்ளனர்.

சமீபத்தில் காங்கிரஸ் முதல்வர்கள் மத்தியில்  உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கோவிட் கொள்கைக்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நிலையில்தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதன் மூலம் ‘தொற்று அதிகரிப்பை குறைக்க முடியாமல் மோடி அரசு உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில், பிரச்சினைகளை கூறுவதும் அரசியல் தந்திரங்களிலிருந்து விலகி மக்களின் நலனுக்காக செயல்பட அரசாங்கத்தை தள்ளுவதும் தங்கள் பொறுப்பு  எனவும் கூறினார்.

தற்போதைய கொரோனா பரவலில் மகாராஷ்டிரா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.  சென்ற ஏப்ரல் 8, ஆம் தேதி நிலவரப்படி, 2.4 கோடி டோஸ் கையிருப்பில் உள்ளன, தவிர 1.9 கோடி டோஸ்க:ள் கிடைக்க உள்ளன. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் கிடைத்த தகவல்களின்படி, தினசரி 33..5 லட்சம் தேவை உள்ளன.

இந்தியாவில் முதல் அலையை திறம்பட சமாளிப்பதில் மக்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியபோது இரண்டாவது அலை வந்தது. மேலும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் கும்ப மேளா போன்ற நிகழ்வுகளும் இந்த காலகட்டத்தில் நடைபெறுகிறது   

சென்ற மார்ச் மாதம் 7ஆம் தேதி  அன்று, சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‘நாம் கொரோனா போராட்டத்தில் இறுதி கட்டத்தில்இருக்கிறோம்’ என்று அறிவித்துள்ளார்.எது எப்படியிருந்தாலும் இந்த நிலையை யார், ஏன் தவறாகக் கையாளுகிறார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் இது கிடையாது. 

கொரோனா தொற்றின் போது மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்ரன இரண்டாவது அலைகளைக் கட்டுப்படுத்த அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதே தற்போதைய கேள்வி ஆகும். இனியாவது மோடி அரசு தேவையான அளவு தடுப்பூசிகளை விநியோகித்து எதிர்க்கட்சி முதல்வர்களின் கவலைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்

என அந்த செய்தியில் காணப்படுகிறது.