டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கீ பாத் என்ற நிகழ்ச்சி வழியே பிரதமர் மோடி நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று அவர் நாட்டின் கலாசாரம், வேளாண் சட்டங்கள், நாட்டின் தலைவர்கள் குறித்து பேசினார்.

அவர் கூறியதாவது: கொரோனா லாக்டவுனில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசி விவாதம் தொடங்கி உள்ளது. நாம் இந்த வைரசுக்கு எதிராக உறுதியாக போராட வேண்டும்.

2020ம் ஆண்டு முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. புதிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகளுடன் முன்னேறுவோம். அனைவரும் நல்ல உடல்நலத்துடன் இருந்து, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

கொரோனா விவகாரத்தில் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்றார்.