சென்னை:

சென்னையில்  காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3550 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், காவல்துறையைச்சேர்ந்த பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் தினசரி அதிகரித்து வருகிறது.
கொரோனா தடுப்பு பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பல காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தற்போது வெளிப்பட்டு வருகிறது. ஏற்கனவே காவல்துறையிச் சேர்ந்த 34 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது  ஐபிஎஸ் அதிகாரி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கோயம்பேடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால், இதன் மூலமாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.