சென்னை:
மிழகத்தில் இன்று புதிதாக 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒரே நாளில் 673 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.