* புதுச்சேரியின் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, அப்பகுதி முழுவதற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இவருவரும் டெல்லி இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தின் சம்மந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பேர், விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், சம்மந்தபுரம் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய அந்த நால்வரும் டெல்லி மத மாநாட்டில் பங்கு கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.

* சென்னை சாந்தோம் பகுதியிலுள்ள அம்மா உணவகத்தில், முதல்வர் பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

* கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது.

* ஊரடங்கு உத்தரவால், பல வெளிமாநிலங்களில் ஆங்காங்கே சிக்கிக்கொண்ட தமிழக வியாபாரிகளை மீட்க உதவிசெய்த சம்பந்தப்பட்ட பல மாநில முதல்வர்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

* மராட்டிய மாநிலத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் ஒட்டுமொத்த அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 320ஆக உயர்ந்தது.