கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் நடிகை பியா பாஜ்பாய் ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அவர் மட்டும் அல்ல கோலிவுட் பிரபலங்கள் சிலரும், நெட்டிசன்கள் பலரும் அதே போஸ்ட் போட்டுள்ளனர்.


தளர்வுகளை கொடுத்திருப்பது அரசாங்கமே தவிர கொரோனா வைரஸ் இல்லை.
1918ம் ஆண்டு பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ 2 ஆண்டுகள் நீடித்தது. 3 கட்டங்களாக பரவி 500 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர், 50 மில்லியன் பேர் உயிர் இழந்தார்கள். இரண்டாவது முறை பரவியபோது தான் மக்கள் அதிக அளவில் உயிரிழந்தார்கள். குவாரன்டைன், சமூக விலகலால் மக்கள் கடுப்பாகி அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட உடன் சாலைகளில் சந்தோஷமாக சுற்றினார்கள். அதன் பிறகு 2வது முறை ஃப்ளூ பரவி பலர் உயிர் இழந்தனர். அதை கோவிட் 19 விஷயத்தில் செய்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் பியா பாஜ்பாய்.
4வது லாக்டவுன் அமலுக்கு வந்த பிறகு கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .