மும்பை: ஒட்டுமொத்த மராட்டிய மாநிலத்தில் இன்று 9,431 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மும்பை மாநகரில் மட்டும் புதிதாக 1,115 தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் இன்று மொத்தமாக 267 மரணங்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், மும்பை மாநகரின் மரண எண்ணிக்கை 57.
ஒட்டுமொத்த மராட்டியத்தின் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3,75,799 என்று உயர்ந்துள்ள நிலையில், மும்பையில் 1,09,096 என்பதாக உயர்ந்துள்ளது.
மும்பையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 80,238 என்பதாக உயர்ந்துள்ளது. அதேசமயம், இதுவரை மும்பையில் இறந்தோர் எண்ணிக்‍கை 6,090 என்பதாக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த மராட்டியத்தில் 2,13,238 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் குணமடைந்தோர் விகிதம் 56.74% என்பதாக உள்ளது.