செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 288 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவி்த்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,005-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,56,526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,494-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 94,695 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 288 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவி்த்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,005-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8,895 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 227 பேர் உயிரிழந்துள்ளனர்.