மும்பை:

மும்பையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 2 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸ் துறையில் கொரோனா பரவுவதை அடுத்து, மாநிலத்தில் உலகின் பெரிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்லது.

காவலர்கள் உயிரிழப்பு குறித்து மும்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஏஎஸ்ஐ முரளிதர் வாக்மரே மற்றும் பிஎன் பகாவன் பார்டே போன்ற காவலர்கள் கொரோனா பாதிப்புக்கு காரணமாக உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில்  1,000 காவலர்கள் கொரோனா பாதிப்பு உள்ளாகியுள்ளதுடன், 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்தமாக இதுவரை 27 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதுடன், 1,019 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு தழுவிய ஊரடங்கு அமல் படுத்தபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, மாநிலத்தின் பாதுகாப்புக்கு 2,000 போலீசார் தேவைப்படுவதாக, ஆயுதப்படை போலீசாருக்கு, மும்பை காவல்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து வெளியான செய்தியில், கொரோனா பாதித்த பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடுவது கிரிமினல்களுடன் மோதுவதை மிகவும் கடினமான ஒன்று என்று மும்பை போலீஸ் உயர் அதிகாரி சலுங்கே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் காவல்துறையினர் எதிர்கொள்ளும் சுகாதார பிரச்சினைகளை கையாள்வதற்காக பிரத்தியேகமாக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக ஊரடங்கு ஆகியவை இரவும் பகலும் நீண்ட நேரம் மிகவும் சவாலான சூழ்நிலையில் பணியாற்றுவதால் போலீஸ் துறையினரின் பணி அதிகரித்துள்ளதை நாங்கள்  அறிவோம் என்றும் தேஷ்முக் கூறியுள்ளார்.