லக்னோ:

மாநிலத்தில்,  1ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையில்லை என்று மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணாக, உ.பி. மாநிலத்தில் ஏப்ரல் 2ந்தேதி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

சீனாவின் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசுக்கு 3 பேர் பலியான நிலையில், 147பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உ.பி. முதல்வர் யோகி, , உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதத் தேவையில்லை எனவும் அவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்பட்டு அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என கூறி உள்ளார்.

உ.பி.யில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் மார்ச் 23 முதல் 28 வரை தேர்வு நடத்த மாநில அரசு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.