டெல்லி:

லைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன. இருந்தாலும், தொற்று பரவல் தீவிரமாகிக்கொண்டே போகிறது.

ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் சோதனையில், அவர்களுக்கு கொரோனா உறுதியாக வில்லை என்று அறிவிக்கப்பட்டது.\

இந்த நிலையில், தற்போது, ஆம் ஆத்மி கட்சியின் தென் டெல்லியில் உள்ள கல்காஜி தொகுதியைச் சேர்ந்த  சட்டமன்ற உறுப்பினர் அதிஷி, கட்சியின் செய்தித் தொடர்பாளர் அக்‌ஷய் மராத்தே ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருவது கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.