இஸ்லாமாபாத்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து  பயணிகள் பாகிஸ்தான் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.  பாகிஸ்தானில் கொரோனா அதிகரித்துள்ளதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தடுப்பூசி போட்டு 2 நாட்களிலேயே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 12 நாடுகள் இருந்து  பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பிரேசில், போட்ஸ்வானா, கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, சாம்பியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படுவதாகவும்,  தடை 23ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.