புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நாக்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகவத் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கண்காணிப்பில் உள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை
ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.