தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதியிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவில், விக்கிரவாண்டியில் 84% வாக்குகளும், நாங்குநேரியில் 66% வாக்குகளும் பதிவாகின. 2021ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளிடையே தொடர்ந்து பதற்றமான நிலையே காணப்படுகிறது.

இந்நிலையில், தற்போது நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளிலும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதியிலும் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அலுவலர்கள், வேட்பாளர், முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.